Saturday, December 21, 2013

எனக்கு ஹெட் செட் வேணவே வேணாம்..

நண்பன் 1 : என்னடா நெட்ல பாக்குற..

நண்பன் 2 : சும்மா ஷாப்பிங் மச்சி..

நண்பன் 1 : என்ன வாங்க ??

நண்பன் 2 : ஹெட் செட் வாங்க போறேண்டா..

நண்பன் 1 : ஓ.. ஓகே ஓகே... நானும் வாங்கணும்டா.. எந்த ஹெட்செட் நல்லா இருக்கும்..

நண்பன் 2 : அதைதான்டா நெட்ல தேடிட்டு இருக்கேன்..

நண்பன் 1 : சோனியா??

நண்பன் 2 : சொல்லுடா ?? சோனியா என்ன சொல்லுறா ?? பிரதமர் வேட்பாளர அறிவிக்க போராளாமா ???

நண்பன் 1 : இல்லடா.., sony நல்லா இருக்கா??? 

நண்பன் 2 : <<<so  நீ>>> ஓ.. அத கேக்குறியா???  நான் நல்லா இருக்கேன்டா..

நண்பன் 1 : அது செரிடா ... sony எப்படி ???

நண்பன் 2 : டேய்.. நான் நல்லா இருக்கேன் டா.. எத்தன தடவடா கேப்ப ??

நண்பன் 1 : டேய் ,, ஹெட் செட்ல sony எப்படி ??? 

நண்பன் 2 :  நானும் ஹெட்செட் தாண்டா வாங்குறேன்...

நண்பன் 1 : டேய்... நான் சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா ???

நண்பன் 2 : நான் எப்படி இருக்கேன்னு தான கேக்குற???

நண்பன் 1 : நான் எப்படா அப்படி கேட்டேன் ? 

நண்பன் 2 : சோ நீ எப்படின்னு கேட்டையே ?? 

நண்பன் 1 : டேய்???? நான் சோ நீ சொல்லல,,, சோனியான்னு கேட்டேன் 

 நண்பன் 2 : டேய் .. அததான் நான் மோதலையே கேட்டேன்ல.. நீ தான் சொல்லல.... சோனியா என்ன சொன்னா ???? 

நண்பன் 1 ::: எனக்கு ஹெட்செட்டே வேணாம்... நீயே பாரு ...

Sunday, November 24, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது part 3

                              2 நண்பர்கள் சந்தித்த போது part 3

நண்பன் 1: மச்சி கடல் செம அழகா இருக்குடா...

நண்பன் 2 : ஆமாடா.. அதுவும் அந்த அலையபாருவே., நிக்காம வந்துட்டே இருக்குல..

நண்பன் 1 : ஆமாம்டா... எப்படிடா அலை நிக்காம வந்துட்டே இருக்கு..???


நண்பன் 2 : அதுடா.. அந்த காலத்துல ஒரு பையன்கிட்ட கடல்ல இருந்து ஒரு பொண்ணு  பேசுச்சாம்.. அது  ஒரு அலைல எப்பயாச்சும் வருமாம் .. அந்த பையன் அப்போ தான் ஸ்கூல்க்கு போனானாம் ,அந்த பையனுக்கு நம்பர்ல பத்து வரைக்கும் தான் தெரியும்..  ஒரு நாளு, உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுச்சாம்.. நான் போதும்ன்னு சொல்லுரவரைக்கும் நீ என்கிட்டே வந்து பாத்து பேசுவயான்னு கேட்டானாம்..அதுக்கு அந்த பொண்ணும்  சரி சரின்னு சொல்லி அப்பப்ப வந்துட்டே இருந்துச்சாம்.  அந்த பையன் ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணு வரும் போதுலாம் அவன் எண்ணிட்டே இருந்தான்..அப்பறம் லேட் ஆகிடுச்சி நான் கெளம்புறேன்,உன்ன பாக்க எத்தன தடவ வந்தேன்னு பாத்தியான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அவன் ஆமாம் பத்தலைன்னு(பத்து அலை) சொன்னான். அதுக்கு அந்த பொண்ணு ஐயோ பத்தலையா உனக்கு ,சரி நான் மறுபடியும் வாறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் வந்துட்டே இருக்குடா ...

நண்பன் 1 : மச்சி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குடா...


-----------இது மூலமா நான் எதுவும் சொல்லவல்ல.. சும்மா எதாவது போடனும்ல அதுக்காகத்தான் ..:)




Friday, November 8, 2013

சும்மா ஒரு கதை...

சில நண்பர்கள் பேசுகின்றனர்...

டேய் மச்சான் என்னைய மட்டும் ஏமாத்தித்து அவ மட்டும் சந்தோசமா இருக்கா, அவ சந்தோசத்த கெடுக்கணும், அவ கல்யாணம் நடக்க கூடாதுன்னு நைட் நேரம் ஒரு நாலு பேரு குடிச்சிகிட்டே ஒரு திட்டம் போட்டாங்க... ஒரு கெட்ட நேரம் என்னன்னா அதில் ஒருவன் மட்டும் குடிக்கல.. மத்த எல்லாரும் குடித்து போதையில் சம்மந்தம் இல்லாமல் தப்பு தப்பாக சில தகவலை பரிமாறுகின்றனர்..

அதை கேட்ட குடிக்காதவன், உண்மை என நம்பி,அவள் இருக்கும் தெருவுக்குள் வர..அங்கு ஒரு பெண் செம மேக்கப்புடன் வருகிறாள்..


அவளை கண்டதும் அவன் நண்பனின் காதலி என்று வியந்து அவன் நண்பனிடம் பேசுகிறான்..அவனும் போதையில் ஆம்மாம் என்று உளற, அவளை ஏமாற்றி கடத்துகிறான்..

அவள் தடுமாறி, அவனிடம் சிக்குகிறாள்.. அவன் அந்த பெண்ணை ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறான்.

திடீரென்று வந்த காட்டு யானையால் அவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் உதவி நாடி, பேச ஆரம்பிச்சனர்.. அப்பொழுது தான் தெரிய வந்தது அந்த பெண்ணுக்கும் அவன் நண்பனுக்கும் சம்மந்தமே இல்லை..
ஆனாலும் அவள் சந்தோஷமாக பேசினாள்..

பிறகு அவர்கள் காட்டில் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.. அந்த பெண் மிகவும் சந்தோஷமாக இயற்க்கையை ரசித்தபடி இருந்தாள்..

அப்பொழுது அவன் அவளிடம் நான் உன் அனுமதி இல்லாமல் ஏமாற்றி கூட்டி வந்தேன்.. ஆனால் நீ அதற்க்கு மாறாக சந்தோஷமாக இருக்கிறாய்.. எப்படி என்றான்..

அதற்க்கு அவள், என்னோட அம்மா என் சிறுவயதிலேயே இறந்துவிட்டாள்..  என்னோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டார், அன்னைல இருந்து என்னோட சந்தோசம் எல்லாம் அழிஞ்சிருச்சி...  நான் எங்க பக்கத்‌து தெருக்குக்கூட போனது இல்ல.. எங்க பக்கத்து தெருவுல இருக்குற என்னோட ஃப்ரென்ட்டோட கல்யாணத்துக்கு வந்தேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வருவேன்னு நினைக்கவே இல்ல... நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு சொன்னாள்...

அதைக்கேட்ட அவனும் இவள்தான் நமக்கு பொறுத்தமானவள் என்று அவளை காதலிக்க ஆரம்பித்தான்.. கொஞ்ச நாளிலே அவளும் அதற்க்கு ஒத்துக்கொள்ள, காட்டை விட்டு செல்கையில் காதலர்களாக செல்கின்றனர்..



Wednesday, November 6, 2013

ஒரு வகுப்பில்

ஒரு வகுப்பில்...
ஒரு பையன்.. அவனது தொலைபேசி காணாமல் போனது..

அவன் ஒரு மொபைல் வாங்க யோசித்தான்,..

இறுதியில்  வாங்கினான்... அதில் ஒரு புதிய சிம் கார்ட் போட்டான்..

அவன் மனதில் இந்த மொபைலில் சேகரிக்கும் முதல் எண் அவள் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தான்..

அதற்காக  ஒரு நாள் அவள் அருகில் அமர்ந்து, அவளுக்கு பரிச்சையில் பதிலை காண்பிக்க ,அவன் டீச்சர்ரிடம் மாட்டினான்..

பிறகு சில நாட்களுக்கு பிறகு,  அவன் ஒரு செமினார்ரில் அவன் எண்ணை சொல்லி ஏதேனும் குறையோ சந்தேகமோ இருந்தால் கூறவும் என்று சொல்ல அவளிடம் இருந்து எந்த இரு கால்லோ இல்லை..

இறுதியில் அவன் மொபைலை காணவில்லை என்று கூற பிற நண்பர்கள் தொடர்பு கொல்ல, எந்த ஒரு பெண்ணின் நம்பரில் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

திடீரென்று அவன் இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று அவன் நண்பனிடம் அவன் புதிய எண்ணை சொல்ல, ஏன் எவளோ நாளாக சொல்லவில்லை என்று ஒருவன் கேட்க அவன் உண்மையை சொன்னான்..

மறுநாள் அவனுடைய நண்பன் ஒருவனிடம் சொல்ல என்று அது காட்டு தீயாய் பறந்தது.. இறுதியாய் அவ காள் காதுக்கு சென்றது..அவள் நேரடியாக அவனிடம் ஏன் என்று கேக்க, பேச, எண்களை பரிமாற நண்பர்களாக மாறினார்..

இதில் இருந்து என்ன சொல்ல ட்ரை  பண்ணுற என்று மட்டும் கேக்காதீங்க.. அது உங்களுக்கே புரிந்துஇருக்கும்.. :) புரியலைன்னா என்னைய கேக்காதீங்க..:)

Friday, October 18, 2013

ஒரு பேருந்து நிறுத்தத்தில்...

ஒரு பேருந்து நிலையத்தில்  நான் பார்த்தது...

ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மிகவும் படபடப்பாக நின்று கொண்டுஇருந்தாள்..

அவள் ஒரு பேருந்துக்காக வெகுநேரம் காத்துகொண்டு இருந்தாள்.

அந்த வழியில் ஒரு பேருந்து வந்ததும் விரைவாக ஓடினாள்.ஆனால் அந்த கூட்டத்தில் அவளால் ஏற முடியவில்லை..




மற்றொரு பேருந்தும் வந்தது.. அதில் ஏற அவள் விரைந்தும்  அவளாள் ஏறமுடியவில்லை..

அதுத்த கனமே மற்றொரு பேருந்தில் ஏறினாள்..  அது பிற பேருந்தை விட டிக்கெட்டின் விலை மலிவாகவும் இருந்தது.. முந்தைய பேருந்தை போல் கூட்டமாக  இல்லாமல் அவளுக்கு உட்கார இடமும் கிடைத்தது..

அவள் பயணித்து செல்லும் பாதையில் பார்த்தாள்.. முன்னே வந்த பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்றுகொண்டிருந்தது.. ஆனால் அவர் ஏறிய பேருந்து எல்லாவற்றையும் தாண்டி முன்னே சென்றுகொண்டிருந்தது..

                                          

அவளும் சந்தோசமாக பயணித்து செல்ல விரும்பும் இடத்திற்கு விரைவில் சென்றாள்..

அவள் எதற்க்காக படபடப்புடன் நின்றாள் என்று எனக்கு தெரியாது.. ஆனால் எனக்கு அப்பொழுது தான் நான் புரிந்தது.. நமக்கென்று கிடைக்கும் ஒன்று தாமதமாக கிடைத்தாலும் நம் மனதிற்கு அது பின்னே சந்தோசம் அளிக்கும் ..!!


Friday, October 4, 2013

இரு திருடர்களின் கதை.

இரண்டு பேர் கொள்ளை அடித்த காரணத்திற்க்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.. 2 வருட தண்டனை அது.  அவர்கள் தான் செய்த தவறை எண்ணி வருத்தப்பட்டுகொண்டு இருந்தனர்..

இதான் அவர்கள் கதை(கற்பனை கதை)..  

இரண்டு பேர் கார் பழுதடைந்த நிலையில் காருக்கு வெளியில் நின்றுகொண்டுஇருந்தனர்.. அங்கு வரும் அனைத்து காரிடமும் லிப்ட் கேட்டுக்கொண்டுஇருந்தனர்.

அப்பொழுது அந்த புறமாக வந்த மற்றொரு வண்டி நின்றது. அந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி என்னவென்று கேட்க நின்று கொண்டிருந்ததில் ஒருவன் அவன் தலையில் ஒரு கட்டையால் அடித்தான்..  வலி தாங்க முடியாமல் அவன் கத்த இன்னொருவன் வாயை மூடி பணம் எவளோ வைத்திருகிறாய் என்று மிரட்ட, அவன் உள்ளே உள்ள பர்சில் 8000 இருப்பதாக கூறுகிறான்..

ஒருவன் சென்று பர்சை எடுக்க கதவை திறக்கிறான்.. உள்ளே அவனது நண்பன் ஒருவன் அருகில் உள்ள பூச்சி கொள்ளும் ஸ்ப்ரேவை அவன் கண்ணில் அடிக்கிறான்.. அதில் அவன் கத்தி கீழே விழ, இன்னொருவன் பிடியில் இருந்த நபரை விட்டு கட்டையை எடுத்து அடிக்க வருகிறான்..

காரில் இருந்து இறங்கியவன் அந்த ஸ்ப்ரேவை கைக்கு பின்னே வைக்க, அடிக்க வந்தவன் என்னவென்று தெரியாமல் பதற்றத்தில் கட்டையை சுற்ற , கீழே விழுந்து இருந்த நண்பன் , கல்லை விட்டு எரிய அவன் கண்ணிலும் அடித்து விடுகிறார்கள்.. காரில் இருந்த இருவரும் அவர்களை சரிமாரியாக அடிக்கிறார்கள். அதில் அந்த திருடனில் ஒருவனுக்கு கண் அழிய மற்றொருவனுக்கு தலையில் பலத்த காயமாகிறது.

அப்பொழுது அவர்கள் கண்ணில் 1.50 லட்சம் தென்படுகிறது  ஒரு திருடனில் பேன்ட்டில். எடுத்தவன் மச்சி சதிஸ் இத நாம எடுத்துக்கலாம் என்று கூறுகிறான். அவனும் ஓகே சொல்ல, பணத்தை எடுத்து சென்று விட்டனர்..

வீட்டுக்கு சென்றதும் அவர்கள் உரையாட துவங்குகிறார்கள்.. இறுதி முடிவாக, அந்த 1.50 லட்சத்தை ஒரு மாதம் கழித்து செலவழிக்கலாம் என்றும், அந்த பணத்தில் என்ன வாங்க வேணுமென்று கனவு காண துவங்க,மறுநாள் காலையில் போலீஸ் அவர்களை தேடி வந்துவிட்டது..
பிடிபட்டதன் காரணம் அவர்களை அடித்ததற்காக இல்லை.. அந்த 1.50லட்சம் இன்னொருவருடையது. இவர்கள் எடுக்கும் அரைமணிநேரத்துக்கு முன்பு, அந்த திருடர்கள் இவர்களிடம் இருந்து எடுத்துஉள்ளான் என்று தெரிய வந்தது..


திருடிய குற்றத்துக்காகவும், திரும்பி கொடுத்ததற்காகவும், மூன்று நாட்களில் சிறையை வெளியே வந்தனர்..  அப்பொழுது அங்கு இருந்த கான்ஸ்டபில் ஒருவரிடம் விசாரித்தனர். எப்படி எங்களை பிடித்தீர் என்று.  அவர் மறுக்க, இறுதியில் கூறினார், சுங்கச்சாவடியில் பதிவான காரின் நம்பர், மற்றும் பணம் எடுக்கும் போது கூறிய சதிஸ் என்ற பெயரே என்று கூறினார்..

அப்பொழுது அவர்கள் செய்த தவறை(தடயத்தை) நினைத்து முதன்முறை வருந்தினர்.. 





Friday, August 16, 2013

தலைவா









"அமலா பால்
ஆஸ்திரேலியா வில்"




ஆரம்ப வார்த்தையே கவிதை மாதிரி இருந்தாலும் இரண்டாம் பாதில மொக்க போட்டுடாங்க .. டான்ஸ் காமெடின்னு நல்லா போன கதைல அமலா பாலுக்கு போலீஸ் டிரஸ்ஸயும் , விஜய்க்கு வெள்ள சட்டடும் போட்டுவிட்டாங்க ..


முதல் பாதியில் சந்தானம் , அமலா விஜய் அப்பறம் முக்கியமா நம்ம சாம் ஆண்டர்சன். அமலா பாலின் புருசனாக ஒரு சில நிமிடம் நடிக்கும் உன்னததமான கதா பாத்திரத்தில் நடித்துஉள்ளார்..

என்னதான் அமலா பாலாக இருந்தாலும் அப்பன் செத்ததுக்கு ஒரு காரணமாக இருந்ததால் அவல கைவிட்டுவிட்டு ஜிலேப்பி மாதிரி இருக்கும் இந்த ஹீரோயின்ன கல்யாணம் பண்ணிருந்தா நல்லா இருந்துருக்கும் ..





அதை தவற விட்டுது ஏனோ தெரியவில்லை...  விஜய்க்காக  இந்த படத்த பாக்கலன்னாலும் இந்த இரண்டு ஹீரோயின்க்காக பாக்கலாம்..

சின்னவயசுல கொன்ன இன்ஸ்பெக்டர் பையன் பெரிய ஆளாகி நாயகன்ல கமல கொல்லுற மாதிரி இந்த படத்துல சத்யராஜ கொல்லுறாங்க.. அதுக்கு அப்பறம் விஜய் கோவப்பட்டு வில்லனை கொல்லுறது தான் கதை...






Wednesday, July 31, 2013

தஞ்சை பெரிய கோவில்..


தஞ்சை பெரிய கோவில்.. 

இங்கு வந்தால் பக்தியையும் மிஞ்சும் அளவிற்கு அழகையும் இந்த கோவில் வைத்திருக்கிறது..எல்லா இடத்திலும் அழகிய சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளது..







கருமேகம் சூழ்ந்த இடத்தில் இந்த மஞ்சள் வெயில் கோபுரங்களில் படுகையில் இயற்கையே சிற்பங்களுக்கு தங்க போர்வை போர்த்தியது போல இருந்தது...  







கோபுரத்தை சுற்றிலும் தமிழ் சூழ்ந்து உள்ளது...இங்கு வந்தபின் நாம் தமிழன் என்று பெருமை படுவோம்...   




கற்களை உடைத்து கட்டிய இந்த கோபுரங்கள், எந்த கல்மனதையும் சுலபமாக கவர்ந்து இழுக்கும் அழகு, பெருமை, எல்லாம் உண்டு.....    



--------------------------------------------------------------------------------------------------



Saturday, June 29, 2013

பழைய நினைவுகள் !!!

ஒரு 6 மாசத்துக்கு முன்னால எனக்கு ரொம்ப போர் அடிச்சது..

என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்ப.. எதாவது கதை எழுதலாமானு பாத்தேன்.. 

அப்ப இதை யோசிச்சேன்..

ஒரு பள்ளியில் ஒரு பெண் குழந்தை படிச்சது...

ஒரு நாள் டீச்சர் டெஸ்ட் வச்சாங்க..

அந்த பொண்ணு படிச்சிட்டு வரல.. 

அப்பறம் சும்மா எழுதலாம்ன்னு எல்லாத்துக்கும் 'B'ய செலக்ட் பண்ணிச்சி..

டீச்சர் திருத்துனாங்க.. அப்பறம் அந்த பொண்ண கூப்பிடாங்க..

அந்த பொண்ணு பயந்துகிட்டே டீச்சர் கிட்ட போச்சி..

அந்த டீச்சர் ஏன் எல்லாத்துக்கும் B செலக்ட் பண்ணிருக்கன்னு கேட்டாங்க..  அதுனால என்ன ஆச்சின்னு தெரியும்மான்னு சொன்னாங்க..

அந்த பொண்ணு பயந்து கிட்டே B பாசான்னு கேட்டுச்சி..

டீச்சர் பாஸ்ன்னு சொன்னாங்க..

அந்த பொண்ணு பேரு என்னன்னு தெரியும்மா???


பீபாசா பாசு (B பாஸா  பாஸ்)... :)      

Tuesday, April 2, 2013

காதல் கிறுக்கல்கள்..


பெண்ணே..!!! என்னை கடந்து செல்வதோ உன் கால்கள்தான் ஆனால் இடைவெளியோ என் இதயத்தில்..!!!

குலுங்கிய பீரில் வரும் நுரைபோல உன்னை பார்த்ததும் என் மனது குலுங்கி உதடு சிரித்து விடுகிறது....!!!

ஒயின் ஷாப்பில் குடித்தாலும் பாரில் குடித்தாலும் போதை ஒன்று தான்.. அது போல நாம் காரில் போனாலும் நடந்து போனாலும் நம் காதல் ஒன்று தான்..

கஜினி முகமது படை எடுத்ததை போல கடற்கரையில் உன் கால்களை தொட ஓடி வரும் அலை..

பெண்ணே..!! உன் கண்கள் என்ன காந்தமா?? தூசி கூட உன் கண்ணில் ஒட்டி கொள்கிறதே..

பெண்ணே..!!  என் காதல் கண்டிஷன் இல்லாத for loop போல , உன் நினைவுகள் infiniteஆக ஓடிக்கொண்டு இருக்கிறது..  

பெண்ணே..!! என்னை பார்த்தல் இருடேட்டிங் ஆக இருக்கிறது என்கிறாயே.. நாம் இன்னும் ஒருமுறை கூட டேட்டிங் செல்லவில்லை என்பதை மறந்து விட்டாயா?? 

-----------------------இப்போதைக்கு இது போதும்......    

Thursday, March 14, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது..(part 2)



தாமு : மச்சி அடுத்த மாசம் பைக் வாங்க போறேன்டா...  காசு எங்கடா??

ரமேஸ் : டேய் பத்தரமா இருக்குடா.. கவலைபடாதே..

தாமு : டேய் நாயே காச வச்சி வீடு வாங்கிடா??

ரமேஸ் : நான் எப்படா வீடு வாங்கினேன்??

தாமு : பத்தரம் வச்சிருக்கேன்னு சொல்லுற??வீடு வாங்காம பத்திரம் மட்டும் எப்படிடா வரும் ???

ரமேஸ் :   டேய்??  இப்படிலாம் பேசுன இனி என் கை பேசும்..

தாமு : என்னது கைபேசியா??? போனும் வாங்கிடா???

ரமேஸ் : ???????

Friday, March 8, 2013

ஒரு கேண்டீனில்..

ஒரு கேண்டீனில் ஒரு பெண்ணும் பையனும் டீ குடிச்சிகிட்டே பேசுறாங்க...
 
பையன் :
என்ன உன் தோழி இப்பலாம் உன் கூட டீ குடிக்க வரவே மாட்டுரா?? 

பெண் :
அவளுக்கும் எனக்கும் சண்டடா..

பையன்: எப்படி டீ..

பெண்: டீ சுமாரா தான் இருக்கு..

பையன்: ஹே  அது இல்ல..  ஏன்?? என்ன பிரச்சனை??

பெண்:          
அவ கிட்ட திருப்பி தாரேன்னு 2000ருபாய் வாங்கினேன்.  நான் திருப்பி தரும்போது கிட்டத்தட்ட 2000 ருபாய் கூட கேட்டா.. அதான்..

பையன்: அப்படி எவளோ கேட்டா அவ??
பெண்: நான் 2000ரூபாய திருப்பி  0002 ரூபாயா கொடுத்தேன்.. அவ 1998 ரூபா எக்ஸ்ட்ரா கேக்குறா??

பையன்:  ???????    

Monday, March 4, 2013

ஒரு வகுப்பறையில்...

வகுப்பறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சண்டை வந்தது..

ஒரு பையன் எழுந்து "பெண்ணாக இருந்தாலும் சுவிட்ச்சை on செய்தால் தான் லைட் எரியும் என்றான்"

ஒரு பெண் எழுந்து "ஆணாக இருந்தாலும் penல தான் எக்ஸாம் எழுத முடியும் என்றாள் "

அதற்கு அந்த பையன் மீண்டும் எழுந்து "சுவிட்ச்ச on பண்ணினா தான் மெசின் ஓடும் அப்ப தான் பேப்பர் வரும்.. அப்பறம் தான் pen வச்சி எழுத முடியும் என்றான்"

அப்பறம் டீச்சர் டென்ஷன் ஆகி ஒழுங்கா ஓடிருங்க இல்ல தொலச்சிருவேன்னு சொன்னாங்க..

அதற்கு ஒருவன் டீச்சர் ஓடி போனா தான் தொலைஞ்சி போய்டுவோம்.. நாங்க இங்கயே இருக்கோம் டீச்சர்ன்னு சொன்னான்..

-------------------------------நல்லா இல்லையோ.................

Friday, March 1, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது...

மச்சி அந்த நாய் குட்டிய பாருடா அழகா இருக்குல??
மச்சி ஒரு டவுட் டா??

என்னடா??

ஏன்டா நாய குட்டின்னு சொல்லுறோம்??


இல்ல மச்சி.. ஹிந்தில பெண் நாய குத்தின்னு சொல்லுவாங்க.. அது கால போக்குல, மொழிபெயர்ப்புல  குட்டின்னு மாறிடுச்சி டா..

இல்ல டா.. குட்டின பொண்ணுங்கள தான் சொல்லுவாங்க..

எப்படிடா அப்படி சொல்லுற

பொண்ணுங்க அழகா டீ போடுவாங்க.. எல்லாரும் அதை குட்ன்னு பாராட்டுவாங்க.. குட்டீன்னு இருந்தது கால போக்குல குட்டின்னு மாறிடுச்சி..

 .................. கோவபடாதீங்க............... :)              

Wednesday, February 27, 2013

ஒரு சின்ன கருத்து

ஒரு வயதான பெண் பேருந்தில் சென்று கொண்டு இருந்தார்..

நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து  இருந்தேன்..
என் அருகில் இருந்த வாலிபன் தன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.

அதுக்கு அந்த  பாட்டி நன்றி சொன்னார்.
ஒரு 10 நிமிடம் கழித்து  அந்த பாட்டி இறங்கும் இடம் வந்தது.

அப்பறம் அவள் தனக்கு வேண்டிய ஒருவளை அந்த இடத்தில் அமர செய்தாள்..

ஆனால் அந்த வாலிபன் அதை கண்டுகொள்ளவில்லை.. அவனுக்கு அது பெரிதாக படவில்லை..

ஆனால் அந்த பெண் உணர்ந்திருக்க வேண்டும், அந்த வாலிபனுக்கு கொடுக்கணும் என்று..
ஒரு சாதாரன ஒரு விசயத்துக்கே ஒருவர் தனக்கு செய்த உதவியை மறந்து மற்ற ஒருவருக்கு கொடுக்கிறார் என்றால் இந்த நாட்டில் எப்படி சிபாரிசு இல்லாமல் இருக்கும்...  

கிரிக்கெட் கிறுக்கல்கள்...

பெண்ணே .. உன் பின்னால போனதுக்கு பதில் பந்து பின்னால போயிருந்தா பௌன்றியயாவது தடுத்திருப்பேன்...

காதல் கவிதையை காகிதத்தில் கிறுக்கி நாம் கெட்டு போவதால் தான் கிரிக்கெட் என்று பெயர் வைத்தார்களோ...

அன்பே நீ என்ன கெயிலா.. என் மனதை அடித்து நொறுக்குகிறாயே ...

பெண்ணே உன் காதல் கிரிக்கெட்டில் என்னையும் சேர்த்துக்கொள்.. அவுட் ஆகாமல் இருப்பேன்...

பெண்ணே நாம் பழகியதை ரிப்ளே போட்டு பாக்காமல் என்னை அவுட் ஆக்காதே உன் மனதில் இருந்து....