Sunday, November 24, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது part 3

                              2 நண்பர்கள் சந்தித்த போது part 3

நண்பன் 1: மச்சி கடல் செம அழகா இருக்குடா...

நண்பன் 2 : ஆமாடா.. அதுவும் அந்த அலையபாருவே., நிக்காம வந்துட்டே இருக்குல..

நண்பன் 1 : ஆமாம்டா... எப்படிடா அலை நிக்காம வந்துட்டே இருக்கு..???


நண்பன் 2 : அதுடா.. அந்த காலத்துல ஒரு பையன்கிட்ட கடல்ல இருந்து ஒரு பொண்ணு  பேசுச்சாம்.. அது  ஒரு அலைல எப்பயாச்சும் வருமாம் .. அந்த பையன் அப்போ தான் ஸ்கூல்க்கு போனானாம் ,அந்த பையனுக்கு நம்பர்ல பத்து வரைக்கும் தான் தெரியும்..  ஒரு நாளு, உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுச்சாம்.. நான் போதும்ன்னு சொல்லுரவரைக்கும் நீ என்கிட்டே வந்து பாத்து பேசுவயான்னு கேட்டானாம்..அதுக்கு அந்த பொண்ணும்  சரி சரின்னு சொல்லி அப்பப்ப வந்துட்டே இருந்துச்சாம்.  அந்த பையன் ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணு வரும் போதுலாம் அவன் எண்ணிட்டே இருந்தான்..அப்பறம் லேட் ஆகிடுச்சி நான் கெளம்புறேன்,உன்ன பாக்க எத்தன தடவ வந்தேன்னு பாத்தியான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அவன் ஆமாம் பத்தலைன்னு(பத்து அலை) சொன்னான். அதுக்கு அந்த பொண்ணு ஐயோ பத்தலையா உனக்கு ,சரி நான் மறுபடியும் வாறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் வந்துட்டே இருக்குடா ...

நண்பன் 1 : மச்சி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குடா...


-----------இது மூலமா நான் எதுவும் சொல்லவல்ல.. சும்மா எதாவது போடனும்ல அதுக்காகத்தான் ..:)




Friday, November 8, 2013

சும்மா ஒரு கதை...

சில நண்பர்கள் பேசுகின்றனர்...

டேய் மச்சான் என்னைய மட்டும் ஏமாத்தித்து அவ மட்டும் சந்தோசமா இருக்கா, அவ சந்தோசத்த கெடுக்கணும், அவ கல்யாணம் நடக்க கூடாதுன்னு நைட் நேரம் ஒரு நாலு பேரு குடிச்சிகிட்டே ஒரு திட்டம் போட்டாங்க... ஒரு கெட்ட நேரம் என்னன்னா அதில் ஒருவன் மட்டும் குடிக்கல.. மத்த எல்லாரும் குடித்து போதையில் சம்மந்தம் இல்லாமல் தப்பு தப்பாக சில தகவலை பரிமாறுகின்றனர்..

அதை கேட்ட குடிக்காதவன், உண்மை என நம்பி,அவள் இருக்கும் தெருவுக்குள் வர..அங்கு ஒரு பெண் செம மேக்கப்புடன் வருகிறாள்..


அவளை கண்டதும் அவன் நண்பனின் காதலி என்று வியந்து அவன் நண்பனிடம் பேசுகிறான்..அவனும் போதையில் ஆம்மாம் என்று உளற, அவளை ஏமாற்றி கடத்துகிறான்..

அவள் தடுமாறி, அவனிடம் சிக்குகிறாள்.. அவன் அந்த பெண்ணை ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறான்.

திடீரென்று வந்த காட்டு யானையால் அவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் உதவி நாடி, பேச ஆரம்பிச்சனர்.. அப்பொழுது தான் தெரிய வந்தது அந்த பெண்ணுக்கும் அவன் நண்பனுக்கும் சம்மந்தமே இல்லை..
ஆனாலும் அவள் சந்தோஷமாக பேசினாள்..

பிறகு அவர்கள் காட்டில் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.. அந்த பெண் மிகவும் சந்தோஷமாக இயற்க்கையை ரசித்தபடி இருந்தாள்..

அப்பொழுது அவன் அவளிடம் நான் உன் அனுமதி இல்லாமல் ஏமாற்றி கூட்டி வந்தேன்.. ஆனால் நீ அதற்க்கு மாறாக சந்தோஷமாக இருக்கிறாய்.. எப்படி என்றான்..

அதற்க்கு அவள், என்னோட அம்மா என் சிறுவயதிலேயே இறந்துவிட்டாள்..  என்னோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டார், அன்னைல இருந்து என்னோட சந்தோசம் எல்லாம் அழிஞ்சிருச்சி...  நான் எங்க பக்கத்‌து தெருக்குக்கூட போனது இல்ல.. எங்க பக்கத்து தெருவுல இருக்குற என்னோட ஃப்ரென்ட்டோட கல்யாணத்துக்கு வந்தேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வருவேன்னு நினைக்கவே இல்ல... நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு சொன்னாள்...

அதைக்கேட்ட அவனும் இவள்தான் நமக்கு பொறுத்தமானவள் என்று அவளை காதலிக்க ஆரம்பித்தான்.. கொஞ்ச நாளிலே அவளும் அதற்க்கு ஒத்துக்கொள்ள, காட்டை விட்டு செல்கையில் காதலர்களாக செல்கின்றனர்..



Wednesday, November 6, 2013

ஒரு வகுப்பில்

ஒரு வகுப்பில்...
ஒரு பையன்.. அவனது தொலைபேசி காணாமல் போனது..

அவன் ஒரு மொபைல் வாங்க யோசித்தான்,..

இறுதியில்  வாங்கினான்... அதில் ஒரு புதிய சிம் கார்ட் போட்டான்..

அவன் மனதில் இந்த மொபைலில் சேகரிக்கும் முதல் எண் அவள் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தான்..

அதற்காக  ஒரு நாள் அவள் அருகில் அமர்ந்து, அவளுக்கு பரிச்சையில் பதிலை காண்பிக்க ,அவன் டீச்சர்ரிடம் மாட்டினான்..

பிறகு சில நாட்களுக்கு பிறகு,  அவன் ஒரு செமினார்ரில் அவன் எண்ணை சொல்லி ஏதேனும் குறையோ சந்தேகமோ இருந்தால் கூறவும் என்று சொல்ல அவளிடம் இருந்து எந்த இரு கால்லோ இல்லை..

இறுதியில் அவன் மொபைலை காணவில்லை என்று கூற பிற நண்பர்கள் தொடர்பு கொல்ல, எந்த ஒரு பெண்ணின் நம்பரில் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

திடீரென்று அவன் இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று அவன் நண்பனிடம் அவன் புதிய எண்ணை சொல்ல, ஏன் எவளோ நாளாக சொல்லவில்லை என்று ஒருவன் கேட்க அவன் உண்மையை சொன்னான்..

மறுநாள் அவனுடைய நண்பன் ஒருவனிடம் சொல்ல என்று அது காட்டு தீயாய் பறந்தது.. இறுதியாய் அவ காள் காதுக்கு சென்றது..அவள் நேரடியாக அவனிடம் ஏன் என்று கேக்க, பேச, எண்களை பரிமாற நண்பர்களாக மாறினார்..

இதில் இருந்து என்ன சொல்ல ட்ரை  பண்ணுற என்று மட்டும் கேக்காதீங்க.. அது உங்களுக்கே புரிந்துஇருக்கும்.. :) புரியலைன்னா என்னைய கேக்காதீங்க..:)