Friday, November 8, 2013

சும்மா ஒரு கதை...

சில நண்பர்கள் பேசுகின்றனர்...

டேய் மச்சான் என்னைய மட்டும் ஏமாத்தித்து அவ மட்டும் சந்தோசமா இருக்கா, அவ சந்தோசத்த கெடுக்கணும், அவ கல்யாணம் நடக்க கூடாதுன்னு நைட் நேரம் ஒரு நாலு பேரு குடிச்சிகிட்டே ஒரு திட்டம் போட்டாங்க... ஒரு கெட்ட நேரம் என்னன்னா அதில் ஒருவன் மட்டும் குடிக்கல.. மத்த எல்லாரும் குடித்து போதையில் சம்மந்தம் இல்லாமல் தப்பு தப்பாக சில தகவலை பரிமாறுகின்றனர்..

அதை கேட்ட குடிக்காதவன், உண்மை என நம்பி,அவள் இருக்கும் தெருவுக்குள் வர..அங்கு ஒரு பெண் செம மேக்கப்புடன் வருகிறாள்..


அவளை கண்டதும் அவன் நண்பனின் காதலி என்று வியந்து அவன் நண்பனிடம் பேசுகிறான்..அவனும் போதையில் ஆம்மாம் என்று உளற, அவளை ஏமாற்றி கடத்துகிறான்..

அவள் தடுமாறி, அவனிடம் சிக்குகிறாள்.. அவன் அந்த பெண்ணை ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறான்.

திடீரென்று வந்த காட்டு யானையால் அவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் உதவி நாடி, பேச ஆரம்பிச்சனர்.. அப்பொழுது தான் தெரிய வந்தது அந்த பெண்ணுக்கும் அவன் நண்பனுக்கும் சம்மந்தமே இல்லை..
ஆனாலும் அவள் சந்தோஷமாக பேசினாள்..

பிறகு அவர்கள் காட்டில் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.. அந்த பெண் மிகவும் சந்தோஷமாக இயற்க்கையை ரசித்தபடி இருந்தாள்..

அப்பொழுது அவன் அவளிடம் நான் உன் அனுமதி இல்லாமல் ஏமாற்றி கூட்டி வந்தேன்.. ஆனால் நீ அதற்க்கு மாறாக சந்தோஷமாக இருக்கிறாய்.. எப்படி என்றான்..

அதற்க்கு அவள், என்னோட அம்மா என் சிறுவயதிலேயே இறந்துவிட்டாள்..  என்னோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டார், அன்னைல இருந்து என்னோட சந்தோசம் எல்லாம் அழிஞ்சிருச்சி...  நான் எங்க பக்கத்‌து தெருக்குக்கூட போனது இல்ல.. எங்க பக்கத்து தெருவுல இருக்குற என்னோட ஃப்ரென்ட்டோட கல்யாணத்துக்கு வந்தேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வருவேன்னு நினைக்கவே இல்ல... நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு சொன்னாள்...

அதைக்கேட்ட அவனும் இவள்தான் நமக்கு பொறுத்தமானவள் என்று அவளை காதலிக்க ஆரம்பித்தான்.. கொஞ்ச நாளிலே அவளும் அதற்க்கு ஒத்துக்கொள்ள, காட்டை விட்டு செல்கையில் காதலர்களாக செல்கின்றனர்..



No comments:

Post a Comment