Sunday, March 23, 2014

பிச்சாவரம்... ஒரு அழகின் அழகு...

சில இடங்கள் நம் நினைவில் நிற்கும்..
சில இடங்கள் நம் கண்ணை விட்டு பிரியாது..





 அது போன்ற இடகளில் ஒன்று தான் இந்த பிச்சாவரம்..   சிதம்பரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..



கடல் நீரில் மாங்குரோவ் காடுகள் சூழ்ந்திருக்க சிறு சிறு தீவுகளாக பச்சை பசேரென்று அழகாக தோற்றமளிக்கும் இடம் இது..


ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்..இங்கு உள்ள மாங்குரோவ் காடுகள் தான் உலகத்திலேயே இரண்டாவது பெரிய மாங்குரோவ் காடுகள்..


இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல பறவைகளுக்கும் ஒரு சுற்றுலாதளமாகவே உள்ளது..



உள்ளே சென்றதும் அதன் அழகை ரசிப்பதை தவிர வேறு எதுவும் மனது நினைக்காது..


இந்த இடத்தை நேரில் பார்ப்பதில் கிடைக்கும் திருப்தி எந்த ஒரு கேமராவாலும் கொடுத்துவிட முடியாது..


வேறு என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல.. பிச்சாவரம் = அழகு..






நான் சொன்னது ஒரு புள்ளி அளவு கூட இல்லை...  எல்லாரும் காணவேண்டிய இடம் இது...

Monday, February 10, 2014

இந்த கிரிக்கெட் விசிறிகளுக்கு என்ன தான் வேணும்...

இந்த கிரிக்கெட் விசிறிகளுக்கு என்ன தான் வேணும்.....


பொதுவாகவே இந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவின் மிகப்பெரிய போராட்ட தியாகியாகவே தன்னை காட்டிக்கொள்வார்கள்..

சரி.. இவர்கள் இந்தியா மீது பற்று கொண்டவர்களாகவே இருக்கட்டும்..  போன மாதம் குடியரசுதினத்தில் தேசியக்கொடியைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏன் சுதந்திரதினத்திர்க்கே கூட பார்த்திருக்க மாட்டார்கள்..
இதில் ஒரு பெரிய விசயமே என்னவென்றால் இது ஒரு தனியார் நிறுவனம்..
இத பத்தி பேசஆரம்பிச்சால்., நீ ஒரு இந்தியன் இல்லை , நீ ஏன் இந்தியால இருக்க ? எப்படில்லாம் கேள்வி நம்மீது எழும்..

ஒரு வேலை இவர்கள் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களா என்று பார்த்தால், அதுவும் இருக்காது ...  இவர்கள் அதிகமாவே பேசுவது, ஒரு வேலை இந்த பந்து சிக்ஸ் போயிருந்தால் இந்தியா ஜெயிச்சிருக்கும்..  இந்நேரம் தோணி மட்டும் இருந்தா,சச்சின் மட்டும் இருந்தா இந்திய ஜெயிச்சிருக்கும்.. இந்த மாதிரி சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருப்பாங்க..

சரி.. ஒருவேலை இவர்கள் கிரிக்கெட் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை..   அது அவுட்டே இல்லடா .. அம்பயர் ஏமாத்திட்டான்..  அதுக்கு சரியா சொல்லிருந்தா , இந்நேரம் இந்தியா ஜெயிச்சிருக்கும்.. ஏண்டா போன மேட்ச்ல அவுட்க்கு நாட்அவுட் சொன்னானே அப்போ எதுவும் நீ சொல்லவே இல்லன்னு சொன்னா, அதுக்கு ஒரு பதிலும் கிடைக்காது...

இவங்ககிட்ட எதுவும் பேசவே முடியாது... சொன்னனதே சொல்லும் கிளிப்பிள்ளை போலவே, இந்தியா இந்தியான்னு சொல்லுவாங்க..  இப்படித்தான் ஒருவனிடம்  சரி இந்தியா இந்தியான்னு சொல்லுறியே  இந்தியாவில் மொத்தம் எவளோ மாநிலம் இருக்குன்னு கேட்டேன்.. அவன் முழிக்க ஆரம்பிச்சிட்டான்..;)

எனக்கு அவங்கள பாத்தா என்ன சொல்லுறதுன்னே தெரியல..  இத பத்தி
 பேச ஆரம்பிச்சா நான் மொக்க போடுறேன்னு சொல்லுவாங்க..  இதபத்தி பேசவே இல்லாம இருந்தா, நமக்கு போன் பண்ணி நம்மகிட்ட ஸ்கோர் கேப்பாங்க.. சரின்னு ஸ்கோர்ரும் சொன்னோம்பா அதுக்குள்ள 2 பேரு அவுட் ஆகிட்டாங்களான்னு நம்மள திட்டுரமாதிரி பேசஆரம்பிச்சிருவாங்க...


என்ன கொடும சார் இது.....